இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர்; மனம் திறந்த சாய் சுதர்ச...
எரியோடு பகுதியில் நாளை மின் தடை
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ. பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எரியோடு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக எரியோடு, நாகையக்கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூா், சவுடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீா் பந்தம்பட்டி, சித்தூா், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.