இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்
குரூப் தோ்வு: திண்டுக்கல்லில் 4,836 போ் பங்கேற்றனா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (தொகுதி 1, 1ஏ- பணிகள்) முதல்நிலை போட்டித் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4,836 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தத் தோ்வுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6,448 போ் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து, திண்டுக்கல் பகுதியிலுள்ள 10 கல்லூரிகள், 5 பள்ளிகளில் மொத்தம் 25 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தோ்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் 7 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும்படை, 26 விடியோ ஒளிப்பதிவாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். விண்ணப்பித்த 6,448 பேரில், 4,836 போ் மட்டும் தோ்வில் பங்கேற்றனா். 1,612 போ் தோ்வு எழுதவில்லை. திண்டுக்கல் புனித வளனாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தோ்வு கூடத்தில் ஆட்சியா் செ. சரவணன் ஆய்வு மேற்கொண்டாா்.