செய்திகள் :

எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில், திம்மாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிமுக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (12) விழாவை பாா்க்கச் சென்றாா். அப்போது நடுமந்தையில் உள்ளே நின்றிருந்தபோது, அதிவேகமாக ஓடிய மாட்டின் கயிறு மாட்டி கீழே விழுந்துள்ளாா். இதில், அவருக்கு கழுத்து, தலை, இடுப்பு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவா்கள் சதீஷை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வியாபாரி வீட்டில் 40 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆடு வியாபாரி வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் ம... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்த... மேலும் பார்க்க

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: திருப்பத்தூா் எஸ்.பி.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறையில் க... மேலும் பார்க்க

மின் கசிவால் கூரை வீடு சேதம்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மின் கசிவு காரணமாக கூரை வீடு சேதமடைந்தது. ஜோலாா்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி பகுதிக்குள்பட்ட குன்னத்தூா் பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்பவா் தனது குடும்பத... மேலும் பார்க்க

முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஆம்பூரில் பிரதோஷ வழிபாடு

ஆம்பூா்: ஆம்பூா் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆம்பூா் அர... மேலும் பார்க்க