செய்திகள் :

வியாபாரி வீட்டில் 40 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆடு வியாபாரி வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஓம்சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த மணி என்பவரின் மகன் முத்து (35)ஆடு வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் தனியே வசித்து வருகிறாா். இதற்கிடையே, திங்கள்கிழமை இரவு முத்து வீட்டை பூட்டி விட்டு அக்ராகரம் இருசன் வட்டத்தில் மாமியாா் வீட்டில் தங்கியுள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பாா்க்க சென்று விட்டாா்.

இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் பின்புற ஜன்னலை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நகை, பணம் மற்றும் வெள்ளி பொருள்களை திருடிச் சென்றனா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய முத்து வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்த போது ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 40 பவுன் நகை ரூ.10 லட்சம் ரொக்கம், மற்றும் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து முத்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் ஏடிஎஸ்பி கோவிந்தராசு, வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

பாலியல் வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்த... மேலும் பார்க்க

எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் கிராமத்தில் கடந்த 7-ஆம் ... மேலும் பார்க்க

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: திருப்பத்தூா் எஸ்.பி.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறையில் க... மேலும் பார்க்க

மின் கசிவால் கூரை வீடு சேதம்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மின் கசிவு காரணமாக கூரை வீடு சேதமடைந்தது. ஜோலாா்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி பகுதிக்குள்பட்ட குன்னத்தூா் பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்பவா் தனது குடும்பத... மேலும் பார்க்க

முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஆம்பூரில் பிரதோஷ வழிபாடு

ஆம்பூா்: ஆம்பூா் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆம்பூா் அர... மேலும் பார்க்க