செய்திகள் :

எலுமிச்சை பழத்தில் ஏறியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார் - என்ன நடந்தது?

post image

புதிய கார் அல்லது வாகனம் வாங்கினால் அதனை கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கம். சிலர் வாகனம் வாங்கியவுடன் அதனை முதலில் எலுமிச்சம்பழத்தின் மீது ஏற்றுவதை சம்பிரதாயமாக வைத்துள்ளனர்.

டெல்லியில் அது போன்ற ஒரு சம்பிரதாயம் செய்ய முயன்று விபரீதத்தில் முடிந்துள்ளது.

டெல்லி நிர்மான் விகார் பகுதியில் உள்ள மகேந்திரா கார் ஷோரூமில் மாணி பவார் என்ற பெண் மகேந்திரா தார் என்ற காரை முன்பதிவு செய்திருந்தார்.

கார் தயாராகிவிட்டது என்று கூறி வந்து டெலிவரி எடுத்துச்செல்லும்படி ஷோரூம் ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்து கிடக்கும் கார்

உடனே மாணி பவார் தனது கணவர் பிரதீப்புடன் ஷோரூம் சென்றார். காரை ஷோரூமில் இருந்து வெளியில் எடுத்துச்செல்வதற்கு முன்பு அதற்கு பூஜை செய்ய முடிவு செய்தார்.

காருக்கு பூப்போட்டு, டயருக்கு அடியில் எலுமிச்சம் பழங்களை வைத்தனர்.

ஷோரூமின் முதல் தளத்தில் கார் இருந்தது. எலுமிச்சம் பழத்தின் மீது காரை ஏற்றுவதற்காக மாணிக் பவார் காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர்த்தினார்.

அந்நேரம் எதிர்பாராத விதமாக கார் ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார். இதனால் கார் வேகமெடுத்து ஷோரூம் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு தரைத்தளத்திற்கு சென்றது.

இதில் கார் மிகவும் மோசமாக சேதமடைந்தது. காரில் இருந்த மாணிக் பவார் மற்றும் ஷோரூம் ஊழியர் விகாஷ் ஆகியோர் இருந்தனர்.

காரில் இருந்த ஏர்பேக் உடனே விரிந்ததால் இருவருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

ரூ.27 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா தார் கார் வாங்கிய உடன் பல லட்சம் செலவு வைத்துவிட்டது.

கீழே விழுந்த கார் தலைகுப்புற விழுந்தது. இக்காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. இச்சம்பவத்தால் ஷோரூமிற்கு கீழே இருந்த சில பொருள்களும் சேதம் அடைந்தது.

இப்போது புதிய கார் பழுதுபார்க்க சென்று இருக்கிறது. கார் வாங்கிய மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்காமல் போனது குறித்து மாணிக் பவார் கவலையடைந்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சிவகாசி: '10 பைசா பிரியாணி' - Youtuber-ன் அறிவிப்பால் குவிந்த கூட்டம்; ஏமாற்றத்தோடு திரும்பிய சோகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபருடைய உணவகத்தின் கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 10 பைசா நாணயத்தை முதலில் கொண்டு வரும் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி, இரண்டு பி... மேலும் பார்க்க

The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவரம் என்ன?

2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை ஆய்வாளர்க... மேலும் பார்க்க

Nano Banana: இணையத்தில் வைரலாகும் ”நானோ பனானா” ட்ரெண்ட் - பின்னணி என்ன?

ஏஐ தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதன் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி நொடிபொழுதில் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.தற்போது, ‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக... மேலும் பார்க்க

Dosa: தோசை மீதான காதலால் கோடிகளில் லாபம் ஈட்டும் தம்பதியினர்; ஓர் அடடே ஸ்டோரி!

அதிக சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு தோசை மீதான காதலால் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர்.அகில் ஐயர் மற்றும் ஸ்ரேயா நாயர் என்ற தம்பதியினர் புதுமண தம்பதிகளாக மும்பையில் தரை ... மேலும் பார்க்க

மரத்துக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்ட நபர்; மதிப்பு ரூ.11,000 என தெரிந்ததால் ரயில்வே அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மற்றும் நாந்தேட் இடையேயான ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது யவத்மால் மாவட்டத்தில் உள்ள கார்ஷி என்ற கிராமத்தில் உள்ள கேசவ் ஷிண்டே என்ற விவசாயியின்... மேலும் பார்க்க

``திருமணத்தில் அசைவ உணவு, மது கூடாது'' - ஆடம்பரத்துக்கு தடை விதித்த கிராம மக்கள் - எங்கு தெரியுமா?

கிராமப் பெரியவர்கள் தீர்மானம்திருமணம் என்றாலே இப்போது கோடிகளில் செலவு செய்வது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக பணக்காரக் குடும்பங்களில் திருமண விழா நடத்தும் போது, ஆடம்பரமாக கோடிகளைச் செலவழிப்பது உறுதியே.... மேலும் பார்க்க