செய்திகள் :

எல்லாவற்றையும் டிரம்ப் அறிவிக்கிறாரே.. இந்தியா அவுட்சோர்ஸிங் கொடுத்துவிட்டதா? ப. சிதம்பரம் கேள்வி

post image

இந்தியா - பாகிஸ்தான் போர், இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக ஒப்பந்தம் என அனைத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவுடன் ஒரு மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவிப்பினை வெளியிட்டிருந்த நிலையில்தான், ப. சிதம்பரம் இந்தக் கேள்வியை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ப. சிதம்பரத்தின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடைபெற்று வந்தபோது, சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலர், சண்டை நிறுத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டார்.

அதுபோல, நேற்று, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து விரைவில் இந்திய வணிகத் துறை செயலர் அறிவிப்பினை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியா, அவுட்சோர்ஸிங் முறையை ஏற்றுக்கொண்டுவிட்டதா?

இந்தியா, உலக நாடுகளுடன் ஏதேனும் ஒப்பந்தம் மேற்கொண்டால், கூட்டாக இணைந்து அது குறித்த அறிவிப்பினை வெளியிடுவது அல்லது ஒருங்கிணைந்த கூட்டறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்த வழக்கத்தை நாம் விட்டுவிட்டோமா என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேட்டுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகவுள்ளது என்று அமெரிக்க வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இது குறித்துத்தான் அமெரிக்க அதிபரும் பேசியிருக்கிறார். தற்போதைய 19,100 கோடி டாலா் மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 50,000 கோடி டாலராக இரட்டிப்பாக்குவதை இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை.

அது மட்டுமல்ல, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மோதலை வர்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்து நிறுத்தியதாக மீண்டும் வெள்ளிக்கிழமை டிரம்ப் பேசியிருக்கிறார். ஏற்கனவே அவர் பல முறை இதனைத் தெரிவித்திருந்த நிலையில், மோதலை தான் நிறுத்தியதாகக் கூறவேண்டாம் என அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்ட பிறகு, ஒரு முறை போரை தான் நிறுத்தவில்லை என்று ஒப்புக்கொண்டாலும், தற்போது இரண்டாவது முறையாக அவர் அதேக்கருத்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க.. இந்தியாவுடன் விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்!

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று கா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தி... மேலும் பார்க்க

மும்பை: கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வொர்லியில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ஒருவர் க... மேலும் பார்க்க

' ரா' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்தியாவின் 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுளள்து. இதனையடுத்து அந்த பதவிக்கு புதிய ... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில்... மேலும் பார்க்க