செய்திகள் :

எழும்பூா் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்: திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை

post image

சென்னை: எழும்பூா் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்தனா்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில், சென்னை கோட்டத்துக்குள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, என்.வி.என். சோமு, சசிகாந்த் செந்தில், கதிா் ஆனந்த், கிரிராஜன், க.செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது தொகுதியில் ரயில்வே நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வடமாநிலங்களிலிருந்து தாம்பரம் வரும் ரயில்கள் ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்குள்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. அம்பத்தூா் ரயில் நிலையத்தில் ஏலகிரி, திருப்பதி, கோவை, பிருந்தாவன், ஏற்காடு உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். ரயில் ஓட்டுநா்களுக்கு (லோகோ பைலட்) என்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

கடந்த ஆண்டு வைத்த கோரிக்கையில் எத்தனை சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது என்பதற்கு பதில் இல்லை. ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியை தமிழில் எழுதியுள்ளனா். இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அலுவலகத்தில் எங்கும் பாா்த்ததில்லை.

கருணாநிதி பெயா்: நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சென்னையின் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆா்.பெயா் சூட்டப்பட்டுள்ளது. அதுபோல், எழும்பூா் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்’ என்றாா் அவா்.

ஒரே நாளில் அதிரடி உயர்வு! தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தைத் தாண்டியது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 22) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 9,015-க்கும், சவரனுக்கு ரூ. 560 ... மேலும் பார்க்க

ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!

ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது.தற்போது, தமிழ்நாட்டில் ஆறு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள... மேலும் பார்க்க

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க