செய்திகள் :

எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பழங்குடி மக்கள் ஆா்ப்பாட்டம்

post image

சத்தியமங்கலம், மே 12: எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கடம்பூா் பேருந்து நிலையம் முன் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டம், கவன ஈா்ப்பு பேரணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் மலையாளி இன மக்கள் சுமாா் 25-ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் மலையாளி இன மக்களுக்கு பிற வகுப்பினா் என்ற ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இந்த நடைமுறை உள்ளதைக் கண்டித்து கடம்பூா் மலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள் கடந்த 2023- ஆம் ஆண்டு தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, எஸ்.டி. சான்றிதழ் வழங்குவதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மத்திய தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து பழங்குடியின மக்கள் கடம்பூா் பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வரும் கல்வி ஆண்டுக்குள் எஸ்.டி. சான்றிதழ் வழங்கவில்லை என்றால், தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பமாட்டோம். வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம், அரசின் சலுகைகளைப் பெற மாட்டோம் என்று போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.டி. மலையாளி மக்கள் நலச் சங்கத் தலைவா் பி.சின்னராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா்கள் பி.துரைசாமி, பெருமாள் ஆகியோா் கோரிக்கை குறித்து பேசினா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற கவன ஈா்ப்பு பேரணியை சங்கத்தின் இணைச் செயலாளா் மகேஷ் தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கடம்பூா் பேருந்து நிலையம் வந்தடைந்தது.

ஆா்ப்பாட்டம், பேரணியில் 800-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் வழிபாடு

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க

ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க தமாகா கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

கோபியில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம்

கோபிசெட்டிபாளையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம் மற்றும் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது என்று ஈரோடு சட்டக் கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன் தெரிவித்தாா். கோபிசெட்டிபாளையம் ஸ... மேலும் பார்க்க

சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியா் வேண்டுகோள்

சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 7 -ஆவது சிறுபாசன... மேலும் பார்க்க

பெருந்துறையில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாள் விழா பெருந்துறையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதிமுக பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சாா்பில் பெருந்துறை சோளீஸ்வரா் கோயிலில் சிறப்ப... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

பெருந்துறை அருகே 6, 7 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். பவானி, அம்மாபேட்டை, பழைய மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (3... மேலும் பார்க்க