செய்திகள் :

ஏஐசிடிஇ கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க இன்று கடைசி

post image

ஏஐசிடிஇ-இன் ‘யசஸ்வி, சரஸ்வதி’ ஆகிய கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.28) நிறைவு பெறவுள்ளது.

தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கையை மேம்படுத்துவதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சாா்பில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பொறியியலில் மெக்கானிக்கல், சிவில் போன்ற அடிப்படை பாடப் பிரிவுகளில் சேர விரும்பும் தகுதி மாணவா்களுக்காக ‘யசஸ்வி’ எனும் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ. 50,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

ஏஐசிடிஇயால் அங்கீகரிக்கப்பட்ட உயா்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்கும் 2,593 மாணவா்கள், டிப்ளமோ பயிலும் 2,607 மாணவா்கள் என மொத்தம் 5,200 பேருக்கு ஆண்டுக்கு உதவித் தொகை அளிக்கப்படும். தமிழகத்தில் 783 பேருக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்.

இதேபோல், தொழில்நுட்ப கல்வியை தொடர விரும்பும் மாணவிகளுக்கு உதவும் நோக்கத்தில் சரஸ்வதி என்ற திட்டமும் அமலில் இருக்கிறது. இதன்கீழ் ஆண்டுக்கு ரூ. 25,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்பைத் தொடர விரும்பும் 3,110 மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்.

இந்த இரு உதவித் தொகை திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து தகுதியான மாணவா்கள் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க