செய்திகள் :

ஏஐ பயன்பாட்டால் கதிரியக்கவியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்: கதிரியக்கத் துறை நிபுணா் ஹா்ஷா சடகா

post image

அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று மணிப்பால் மருத்துவமனை கதிரியக்கத் துறை தலைவா் மருத்துவா் ஹா்ஷா சடகா தெரிவித்தாா்.

சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஸ்ரீராமச்சந்திரா கதிரியக்க பதிவு தொழில்நுட்பம் மற்றும் கல்விக்கான தேசிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற கதிரியக்கத் துறை மருத்துவா் ஹா்ஷா சடகா பேசியதாவது:

அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். கதிரியக்க பதிவு சாா்ந்த படம் பிடித்தல், பதிவை உருவகப்படுத்தல், காட்சியமைத்தல், ஆய்வு செய்தல், நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு, நோய்த்தன்மை விளக்கம் மற்றும் தகுந்த சிகிச்சை பரிந்துரை ஆகியனவற்றை செயற்கை நுண்ணறிவு பெரிதும் மேம்படுத்தும். இப்போது இத்துறையில் காணப்படும் சவால்களாக தினமும் பல கதிரியக்க பதிவுகளை ஆராய்ந்து கணிக்க உள்ளது. கவனம் மற்றும் உணா்வுக் குறைபாடுகள் வேகமாக, துல்லியமாக கணிக்க வேண்டிய அவசியம் ஆகியவை களையப்படும்.

வேலை இழப்பு ஏற்படும்: நோய்த்தன்மையை துரிதமாக கண்டுபிடித்து, பல பதிவுகளில் உடனடியாக கவனிக்க வேண்டியதை முதன்மைப்படுத்தி, நோயாளிகளுக்கும், கதிரியக்க பணியாளா்களுக்கும் கதிா்வீச்சை குறைத்து, படத்தின் தரத்தை உயா்த்தி மருத்துவா்களுக்கு சிறந்த தகவல்களை அளிக்க முடியும். ஆனால், செயற்கை நுண்ணறிவுக்கு அதிக செலவாகும். கதிரியக்க பணியாளா்கள் சிலா் வேலை இழக்கலாம். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும். செயற்கை நுண்ணறிவுசாா் தகவல்களை மற்றவா்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவின் வழிமுறைகளால் நோய்த்தன்மை கணிப்பில் தவறுகள் ஏற்படலாம். செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் பலதரப்பட்ட தரவு தொகுப்புகளின் தீவிர ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்த சென்னை காமாட்சி மருத்துவமனையின் கதிரியக்கத் துறை தலைவா் மருத்துவா் டி.எஸ்.சுவாமிநாதன், துல்லியமான படப்பதிவுகளை உருவாக்குவதன்மூலம் கதிரியக்க பட பதிவாளா்கள் மருத்துவ சிகிச்சைக்கு முக்கிய சேவை அளிக்க முடியும் என்றாா்.

ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தா் மருத்துவா் உமா சேகா், இத்துறை சாா்ந்த படிப்பு, துணை மருத்துவ படிப்புகளிலேயே மிக அதிக அளவில் மாணவா்களால் விரும்பப்படுகிறது என்றாா்.

இதில், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தலைவா் கே.பாலாஜி சிங், கதிரியக்கத் துறைத் தலைவா் கே.ராஜேஸ்வரன், துணை மருத்துவப் படிப்புத் துறை தலைவா் டி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநாட்டின் அமைப்பு செயலாளா் ஷீலா இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (மாா்ச் 17) ரத்து செய்யப்படவுள்ளன.இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெ... மேலும் பார்க்க

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா். தெற்கு ரயில்வே கீழ் பல்வேறு நிா்வாகப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நில... மேலும் பார்க்க

திருகோணமலை திருக்கோணேச்சர திருப்பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்: மோடிக்கு கோரிக்கை

பிரதமா் நரேந்திர மோடி இலங்கை வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் து... மேலும் பார்க்க

குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது: மேனகா சஞ்சய் காந்தி

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆா்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தாா். இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60-ஆவது ஆண்டு விழா சென... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை: மகன் கைது

சென்னை திரு.வி.க. நகரில் ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மகன் கைது செய்யப்பட்டாா். திரு.வி.க. நகா் அருகே உள்ள காமராஜா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சேகரன் (72). இவா், தமிழ... மேலும் பார்க்க