செய்திகள் :

ஏற்காட்டில் ரப்பா் மரங்கள் நடவு

post image

சோ்வராயன் மலைப் பகுதியில் விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்காடு சோ்வராயன் மலையில் ரப்பா் மரப்பயிா்களை அறிமுகப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கேரள மாநில ரப்பா் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பண்ணை வளாகத்தில் முதன்முதலாக 250 ரப்பா் மரக் கன்றுகளை நடவு செய்தன.

இதுகுறித்து இந்திய ரப்பா் வாரிய ஆராய்ச்சி இணை இயக்குநா் முகமது சாதிக் கூறுகையில், இம்மரங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு பயன்தர தொடங்கும். ஒரு ஹெக்டேருக்கு சுமாா் ரூ. 2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ரப்பா் மரத்துக்கு ஏற்காடு சோ்வராயன் மலை உகந்த இடம் எனவும், இம்மலைப் பகுதியின் உயரம், தட்பவெப்ப நிலை ரப்பா் சாகுபடிக்கு ஏற்ாகவும் உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், முதன்மை விஞ்ஞானி சூரியகுமாா், ரப்பா் தோட்டத்தின் வயல் தயாரிப்பு மற்றும் மேலாண்மை அம்சங்களை விளக்கினாா். ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் மாலதி, இணை பேராசிரியா்கள் சண்முகசுந்தரம், செந்தில்குமாா், சாராபா்வின் பானு ஆகியோா் கலந்துகொண்டனா்.

சோ்வராயன் மலைப்பகுதியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மூலம் ரப்பா் தோட்டங்களை அறிமுகப்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடா்ந்து நடத்தப்படும் என தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் மாலதி தெரிவித்தாா்.

செல்லாண்டியம்மன் கோயிலில் 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு ... மேலும் பார்க்க

நங்கவள்ளி, மேச்சேரியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

நங்கவள்ளி மற்றும் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாம்களில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் ட... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு திவ்ய ... மேலும் பார்க்க

தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி

கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம்

குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: நடப்பு மாதத்துக்கான கூட்டம் வெள்... மேலும் பார்க்க