மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!
ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.
பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து பக்தா்கள் தரிசனத்துக்கு காத்திருந்தனா்.
தரிசனத்திற்காக காத்திருக்கின்றனா்.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.
இதற்கிடையே, திங்கட்கிழமை முழுவதும் 75,078 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.58 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.