செய்திகள் :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி : ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு!

post image

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ரூ. 10,000-க்கு டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் மாதம் 12 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. தொடர் மழை காரணமாக இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ஏராளமானோா் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் நுழைவுச்சீட்டு இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் திரும்பினர்.

இதற்கு, நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி ஈவெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து, நிகழ்ச்சியை காணாதவா்களுக்கு நுழைவுக் கட்டணத்தைத் திருப்பி அளித்தது.

இந்த நிலையில் வாகன நிறுத்தத்துடன் சேர்த்து ரூ. 10,000 டிக்கெட் எடுத்திருந்த அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டபோது முறையாக திட்டமிடாததாலும் செப்டம்பர் மாதம் நடைபெற்றபோது போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாததாலும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு கோரியும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி தரக்கோரியும் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்தப் புகாரை விசாரணை செய்த ஆணையம், நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி ஈவெண்ட்ஸ் நிறுவனம் ரூ. 50,000 இழப்பீடாகவும், ரூ. 5000 வழக்கு செலவாகவும் மொத்தம் ரூ. 55,000-த்தை மனு தாரருக்கு இரண்டு மாதங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தனியாருக்காக புதிய இடத்தில் ரெகுலேட்டர்: இபிஎஸ்

தனியாரின் நலனுக்காக புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதைக் கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி ... மேலும் பார்க்க

35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரு ஆசிரியர்கூட நியமிக்கப்படவில்லை: அன்புமணி

35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரு ஆசிரியர்கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேர் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்பு!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத... மேலும் பார்க்க