திருமண சீர்... நூற்றுக்கணக்கான பூனைகளை கொடுத்த அப்பா! எந்தவகைப் பூனை தெரியுமா? -...
கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
சாய்பாபா காலனி பகுதியில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆா். சாலையைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (85). வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், தனது வீட்டில் கட்டிலில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தாா். அப்போது, அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாகவும், இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவரை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.