செய்திகள் :

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆறுதல் வெற்றியை தடுத்த ஆப்கன் பந்துவீச்சாளர்!

post image

முத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி அசத்தியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 170 ரன்கள் எடுக்க, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

171 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. ஐக்கிய அரபு அமீரக வீரர் ஆசிஃப் கான் முதல் மூன்று பந்துகளில் 4,6,2 ரன்கள் எடுத்து, கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையை உருவாக்கினார்.

இருப்பினும், ஆப்கானிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஃபரீத் அகமது அடுத்த இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதும் கொடுக்காமல் அற்புதமாக வீசினார். அதன் பின், கடைசி பந்தில் ஆசிஃப் கானின் விக்கெட்டினையும் வீழ்த்தினார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

முத்தரப்பு தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ஐக்கிய அரபு அமீரகம், 4-வது மற்றும் கடைசி லீக் போட்டியிலும் தோல்வியடைந்து ஆறுதல் வெற்றி பெறும் வாய்ப்பை தவறவிட்டது.

இந்த முத்தரப்பு தொடரில் நாளை (செப்டம்பர் 7) நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Afghanistan won the tri-series T20I against the United Arab Emirates by a thrilling 4-run margin.

இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார்: மிட்செல் ஸ்டார்க்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

ஆசிய கோப்பைக்கான ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார்: மிட்செல் ஸ்டார்க்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிப்பதற்காக எந்த அளவுக்கு கடினமாகவும் உழைக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாள... மேலும் பார்க்க