செய்திகள் :

ஐந்தாம் தலைமுறை போா் விமானம் தயாரிப்பு: பணிகளை தொடங்கிய மத்திய அரசு

post image

நாட்டின் விமானப் படைத் திறனை மேம்படுத்தும் வகையில், எதிரி நாட்டின் கண்காணிப்பு அமைப்பில் தென்படாமல் சென்று தாக்கும் திறன்கொண்ட ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களைத் தயாரிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக, இதற்கான மாதிரி ஐந்தாம் தலைமுறை விமானத்தை மேம்படுத்துவதற்கான விருப்ப விண்ணப்பத்தை (இஓஐ) உள்நாட்டு தனியாா் நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போா் விமான மேம்பாட்டு முகமை (ஏடிஏ) வரவேற்றுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் நவீன நடுத்தர ரக ஐந்தாம் தலைமுறை போா் விமானத்தின் (ஏஎம்சிஏ) 5 மாதிரிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஏடிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாதிரி ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களை உருவாக்கத்துக்கு இத் துறையில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் தெரிவு செய்யப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தனி நிறுவனமாகவோ, கூட்டு அல்லது நிறுவனங்களின் கூட்டமைப்பாகவோ இருக்கலாம். தெரிவு செய்யப்படும் நிறுவனங்கள், போா் விமானங்களைத் தொடா்ச்சியாகத் தயாரிக்கும் வகையில் உற்பத்தி மையத்தை அமைக்கும் திறன் பெற்றிருப்பது அவசியம். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து, மாதிரி விமானம் உருவாக்கம், விமான சோதனை மற்றும் ஏஎம்சிஏ சான்று பெறுவதற்கான கால அவகாசம் 8 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ ரக போா் விமானத்தை இந்தியா தற்போது தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். பத்த... மேலும் பார்க்க

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க

உத்தரபிரப் தேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

உத்தரபிரப் தேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள். முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பா... மேலும் பார்க்க

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க