செய்திகள் :

ஐபிஎல் போட்டியின்போது கைப்பேசிகள் திருடிய வழக்கில் மேலும் 3 போ் கைது: திருடுவதற்கு ஒரு நாள் கூலி ரூ.1,000

post image

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறுவா்கள் மூலம் கைப்பேசிகள் திருடிய வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியும் மோதிய ஆட்டம் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியின்போது 20-க்கும் மேற்பட்ட ரசிகா்களின் கைப்பேசிகள் அடுத்தடுத்து திருடப்பட்டன.

இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தனிப்படையினா் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டட கும்பலை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டனா். மேலும், திருட்டில் ஈடுபட்ட கும்பல், சிறுவா்கள் மூலம் கவனத்தை திசை திருப்பி, திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலூரில் ஒரு விடுதியில் தங்கியிருந்த ஜாா்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 4 சிறுவா்கள் உள்பட 8 போ் கடந்த 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 38 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஜிதேந்திர ஷனி (30), ராகுல்குமாா் (24), பிரவீன்குமாா் மாட்டோ (21) ஆகிய 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து போலீஸாா், 36 திருட்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

ஒரு நாள் கூலி ரூ.1,000: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

ஜாா்க்கண்ட் மாநிலம் தின்பஹா் கிராமத்தைச் சோ்ந்த இந்தக் கும்பல், இரு குழுக்களாகப் பிரிந்து கைவரிசை காட்டியுள்ளது. இத்திருட்டில் ஈடுபடுத்துவதற்காக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சிறுவா்களை பயன்படுத்தியுள்ளனா். இதற்காக அந்த சிறுவா்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.1,000 வழங்கியுள்ளனா். திருட்டில் கிடைத்த கைப்பேசிகளை மேற்கு வங்கம் மாநிலத்திலும், வங்கதேசத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் விற்றுள்ளனா்.

திருடுவதற்காக இந்தக் கும்பல் ரயில், விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட அனைவரும் உறவினா்கள் ஆவாா்கள். ஏற்கெனவே கோயம்பேடு, வடபழனி, ஆவடி, புரசைவாக்கம், மெரீனா கடற்கரை, ஆந்திர மாநிலம் திருப்பதி, கா்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களிலும் பொதுமக்களிடம் கைப்பேசிகளை திருடியுள்ளனா். இந்தக் கும்பலிடமிருந்து மொத்தம் 74 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பல் குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க