செய்திகள் :

ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து அணி: வரலாறு படைத்தது செல்ஸி!

post image

செல்ஸி கால்பந்து அணி முதல்முறையாக கான்ஃபரன்ஸ் லீக் கோப்பையை வென்றது.

கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் பெட்டிஸ், செல்ஸு அணிகள் போலந்தின் வ்ரோக்லாவ் திடலில் மோதின. இந்தப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதில் முதல் பாதியில் ரியல் பெட்டிஸ் 9ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது.

இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த செல்ஸி 65,70,83, 90+1ஆவது நிமிஷங்களில் தொடர்ச்சியாக கோல்களை அடித்தது.

இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பாவின் முக்கியமான 5 கோப்பைகளையும் கைப்பற்றிய முதல் அணியாக செல்ஸி எஃப்சி சாதனை படைத்துள்ளது.

1905ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செல்ஸி எஃப்சி கால்பந்து அணி இதற்கு முன்பாக 1971,98-இல் கப் வின்னர்ஸ் கப், 1998,2021-இல் சூப்பர் கப், 2013, 2019இல் ஐரோப்பிய லீக், 2012, 201-இல் சாம்பியன்ஸ் லீக்கையும் வென்றிருந்தது.

இதுவரை வெல்லாத கான்ஃபரன்ஸ் லீக் கோப்பையை இந்த சீசனில் வென்று ஐரோப்பாவின் முக்கியமான 5 கோப்பைகளையும் வென்ற முதல் அணியாக செல்ஸி வரலாறு படைத்துள்ளது.

ரஷியா உக்ரைன் போரினால் கடந்த 2022இல் செல்ஸி கால்பந்து அணியை அமெரிக்காவைச் சேர்ந்த டாட் போஹ்லி வாங்கினார்.

அதிகமான ரிஸ்க் எடுக்கப்பட்டதாக பலரும் விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் எடுத்த முடிவை வரலாறாக மாற்றியுள்ளார்.

வயது அடிப்படையில் 3 வகை திரைப்பட தணிக்கைச் சான்று: மத்திய அரசு

வயது அடிப்படையில் 3 வகையிலான திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் வழங்குவது தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் உள்பட அனைவரும், குழந்தைகள் மட்டும் அல்லது ப... மேலும் பார்க்க

24 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் தனது பங்களிப்பை நிறைவு செய்தது இந்தியா. தென்கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: ஐசிசி தலைவா் ஜெய் ஷா பங்கேற்பு

ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஐசிசி தலைவா் ஜெய் ஷா கலந்து கொண்டாா். ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் பிரசித்தி பெற்ற சாம்ப... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் ஏலம்: ஈரான் வீரா் ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு வாங்கப்பட்டாா்

புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை வீரா்கள் ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக ஈரான் வீரா் முகமதுரேஸா ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். மேலும் 3-... மேலும் பார்க்க

4-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா், ஆன்ட்ரீவா, பெகுலா

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா், மகளிா் பிரிவில் ஜெஸிக்கா பெகுலா, மிரா ஆன்ட்ரீவா முன்னேறினா்... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் சூர்யா - 45 படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவரது 45-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கடட்த்தை எட்டியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்த... மேலும் பார்க்க