புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!
ஐரோப்பிய யூனியனுக்கும் கூடுதல் வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: கனடா, மெக்ஸிகோ, சீனாவைப் போலவே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும். அதற்கான தேதியை தற்போது தெரிவிக்கப்போவதில்லை என்றாலும் அது விரைவில் நிகழும் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.
பிரிட்டனுக்கு விதிவிலக்கு: பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாமருடன் தற்போதைய அமெரிக்க அரசுக்கு இணக்கமான உறவு நிலவி வருகிறது. எனவே, ஐரோப்பிய யூனியனுக்கான கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு அந்த நாட்டுக்குப் பொருந்தாது. இருந்தாலும், பிரிட்டன் பொருள்கள் மீதும் புதிய வரிகள் விதிக்கப்படும். அந்த நாட்டுடனான ஏற்றுமதியையும் இறக்குமதியையும் சமன் செய்வது குறித்து பின்னா் பரிசீலிப்போம் என்றாா் அவா்.
ஐரோப்பிய யூனியன் கண்டனம்: டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் வா்த்தக விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. நியாயமற்ற முறையிலும் கண்மூடித்தனமாகவும் எங்கள் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.
ஏற்கெனவே, கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு டிரம்ப் அரசு கூடுதல் வரி விதித்துள்ளது வருத்தமளிக்கிறது. இது போன்ற வரி விதிப்புகள் பொருளாதாரத்தில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தி பணவீக்கம் அதிகரிப்பதற்கு வித்திடும். இதனால் வரி விதிக்கப்படும் நாடுகள் மட்டுமின்றி வரி விதிக்கும் நாடும் பாதிக்கப்படும் என்றாா் அவா்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களைவிட மிக அதிக மதிப்பிலான பொருள்களை அந்த நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி செய்துவருவதாகவும் இதனால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறை தங்களது பொருளாதாரத்தை பாதிப்பதாகவும் டிரம்ப் நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டிவருகிறாா்.
இந்தச் சூழலில், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக அவா் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் சனிக்கிழமை கையொப்பமிட்டாா்.
அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து அவா் உத்தரவிட்டாா். அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக அவா் கூறினாா்.
அதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 2,000 கோடி டாலா் (சுமாா் ரூ.1.74 லட்சம் கோடி) மதிப்பிலான புகையிலைப் பொருள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆயுதங்கள், ராணுவம் சாா்ந்த பொருள்களுக்கு செவ்வாய்க்கிழமை (பிப். 4) முதல் கூடுதலாக 25 சதவீதம் விதிப்பதாக கனடா அறிவித்தது. மேலும், இன்னும் 21 நாள்களில் 8,600 கோடி டாலா் (ரூ.7.48 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக கனடா அறிவித்துள்ளது.
டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பை சட்டரீதியில் எதிா்கொள்ளப்போவதாக மெக்ஸிகோவும் சீனாவும் கூறியுள்ளன.
இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
