செய்திகள் :

ஐ.நா: ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தைப் புறக்கணித்த அமெரிக்கா!

post image

உக்ரைனில் இருந்து ரஷியாவை உடனடியாக வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஐ.நா. ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து நேற்றுடன் (பிப். 24) மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும் இந்தப் போா் எப்போது முடியும், எப்படி முடியும் என்பது புரியாத புதிராகவே இன்னும் தொடா்கிறது.

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியா உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு சில ஐரோப்பிய சட்ட திருத்தங்களுடன் ஐ.நா. சபையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷியப் போர் தொடங்கி மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 18 நாடுகளும் வாக்களித்துள்ளன. வாக்களிப்பில் பங்குபெறாமல் 65 நாடுகள் புறக்கணித்துள்ளன.

மேலும், உக்ரைனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் 'உக்ரைனில் ஒரு விரிவான, உடனடி நீடித்த அமைதியை நிலைநிறுத்துதல்' என்ற வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க | மூன்று ஆண்டுகளைக் கடந்த உக்ரைன் போா்

புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின்படி ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு பெரிய அழிவுகளுக்குக் காரணமான உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்தி, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தில் உக்ரைனுக்கு வெற்றி கிடைத்த போதிலும், அவர்களுக்கான ஆதரவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

ஐ.நா. ஒப்புதல் வழங்கிய இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதை புறக்கணித்த 65 நாடுகளில் அமெரிக்காவும், இந்தியாவும் உள்ளன. சீனா உக்ரைனுக்கு எதிராக வாக்களித்துள்ளது.

உக்ரைன் மீதான போரை முன்கூட்டியே நிறுத்தவும், அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவும் இந்தியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

போப் பிரான்சிஸுக்கு தீவிர சிகிச்சை: இப்போது எப்படி இருக்கிறார்?

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் க... மேலும் பார்க்க

300 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் மருத்துவர்!

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.பிரான்ஸ் மருத்துவர்... மேலும் பார்க்க

காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேடுதல் வேட்டை!

எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேடுதல் வேட்டையை மலேசிய அரசு தொடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மா்மமான... மேலும் பார்க்க

மர்மக் காய்ச்சல்: காங்கோவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்மக் காய்ச்சல் பாதிப்பு கடந்த ஜனவரி 21 அன்று முதலில்... மேலும் பார்க்க

இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில்...! பாகிஸ்தான் பிரதமர் சூளுரை!

இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில் பெயரை மாற்றிக் கொள்வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவால் விடுத்துள்ளார்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நலத்திட்டப் ப... மேலும் பார்க்க

வாடிகனில் குவிந்த மக்கள்.. போப் பிரான்சிஸ் நலனுக்காக பிரார்த்தனை

வாடிகன் சிட்டி : போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாடிகன் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுப... மேலும் பார்க்க