செய்திகள் :

ஒசூரில் அரசு பொறியியல் கல்லூரி: பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

post image

ஒசூரில் தொழிலாளா் வைப்புநிதி அலுவலகம், அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கோரிக்கை விடுத்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில்சாலைகள் மற்றும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கையின் போது ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் ஒசூரில் தொழிலாளா் வைப்புநிதி அலுவலகம் (பி.எப்) அமைக்க வேண்டும். தளி சாலையில் ஹரிதா, ஆவ்டெக், கேட்டா்பில்லா், டிவிஎஸ், ஏத்தா் போன்ற பெரு நிறுவனங்கள் இயங்கி வருவதால் ஒசூா்- தளி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்துடன் உள்வட்டச் சாலையை இணைத்து வட்டச்சாலை அமைக்க வேண்டும். ஒசூரில் அதிக அளவில் தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். அந்திவாடி மினி விளையாட்டு அரங்கை தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

மேலும், ஒசூரில் ரூ. 400 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஒசூா் அறிவுசாா் பெரு வழித்தடம், ரூ. 370 கோடியில் புறவழிச் சாலை, ரூ.100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ. 51 கோடியில் ஒசூா் புறநகா்ப் பேருந்து நிலையம், ரூ. 583 கோடியில் புதை சாக்கடை திட்டம், பன்னாட்டு விமான நிலையம் என ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ. 1,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேசிசெட்டி தெருவில் உள்ள பசவேஸ்வரா் கோயிலில் ஏப். 16-ஆம் தேதி கங்கா பூஜை, வ... மேலும் பார்க்க