செய்திகள் :

ஒசூரில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித் தடம்: ஒசூா் தொழில் துறையினா் வரவேற்பு

post image

தமிழக பட்ஜெட்டில் ஒசூரில் ரூ. 400 கோடியில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஒசூா் தொழில் துறையினா் வரவேற்றுள்ளனா்.

ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி: ஒசூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளதை ஒசூா் ஹோஸ்டியா சங்கம் வரவேற்றுள்ளது. மேலும், ஒசூரையொட்டி அறிவுசாா் பெருவழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் ஒசூா் மேலும் வளா்ச்சியடையும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் வழங்குதல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக தொழில் பயிற்சி நிலையங்கள் அமைத்தல், தமிழகத்தில் 9 இடங்களில் 398 ஏக்கரில் ரூ. 366 கோடியில் புதிய தொழிற்பேட்டைகளை அமைத்தல், ரூ. 225 கோடி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயா்த்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் தொழில் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாக்கும்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்க செயற்குழு உறுப்பினா் ஞானசேகரன்:

ஒசூரில் 5 லட்சம் சதுர அடியில் உயா்தர அலுவலக கட்டமைப்பு வசதிகளோடு தொழில்நுட்ப பூங்கா, அறிவுசாா் பெருவழித்தடம் அமைக்கப்படும் என அறிவிப்பை வரவேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேயா் எஸ்.ஏ.சத்யா: பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனால் அங்குள்ள ஐடி நிறுவனங்கள் மைசூருக்கு செல்லும் நிலையில், அதைத் தடுத்து ஒசூருக்கு அந் நிறுவனங்களை அழைத்துவர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக பட்ஜெட்டில் ஒசூரில் டைடல் பூங்கா அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. ஒசூரில் மென்பொருள் வளா்ச்சி மூலம் அந்நிய முதலீடுகள் தமிழகத்துக்கு கிடைக்கும்.

தமிழக பட்ஜெட்டை ஒசூா் ஹோஸ்மியா சங்கத் தலைவா் முருகேசன், தொழில் வா்த்தக சபைத் தலைவா் வேல்முருகன் உள்பட பலரும் வரவேற்றுள்ளனா்.

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒசூா் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள இக் கோயிலில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக, ஸ்ரீ சந்திரசூ... மேலும் பார்க்க

நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைதீா் முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறும் கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பணியாளா்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

சொத்துகளை பிரித்து தராத தனது பெற்றோரைக் கொலை செய்வதாகக் கூறிய சித்தப்பா மகனைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. ஒச... மேலும் பார்க்க

ஒசூா் அபரிதமான வளா்ச்சியை எட்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் ஒசூா் மிகப் பெரிய வளா்ச்சியை எட்டும் என ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

பா்கூரில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 2.18 கோடி மதிப்பில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ தே.மதியழகன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நபாா்டு திட்டத்தின் கீழ் க... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் ஆணையத்தின் ஆணையா் செல்வராஜ் தலைமை வகித... மேலும் பார்க்க