செய்திகள் :

ஒடிஸா: டானா புயல் கரையை கடக்க தொடங்கியது!

post image

ஒடிஸாவில் ‘டானா’ புயல் இன்று(அக். 25) கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி, ஒடிஸாவின் பாரதீப் பகுதிக்கு கிழக்கு-வடகிழக்கே 50 கி.மீ. தொலைவிலும், தாமரா பகுதிக்கு தெற்கு- தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தென்மேற்கே 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள டானா புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஸா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை ஒட்டி, ஒடிஸாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே பிதர்காணிகா - தாமராவுகு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 - 4 மணி நேரத்துக்கு, மேற்கண்ட பகுதிகளில் அதிவேக சூறாவளிக் காற்று மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத செபி தலைவா் -கூட்டம் ஒத்திவைப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவா் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிா்த்தாா். இதையடுத்து, ந... மேலும் பார்க்க

வயநாடு வேட்பாளா் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி -பாஜக விமா்சனம்

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமா்சித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத... மேலும் பார்க்க

தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசா் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசா் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது. அத... மேலும் பார்க்க

எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது -நிா்மலா சீதாராமன்

அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். ‘இந்தியா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி முக்கியத்துவத... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: நிதின் கட்கரி

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவ... மேலும் பார்க்க

எல்லையில் இயல்புநிலையை மீட்பதில் இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை -ராஜ்நாத் சிங்

இந்திய-சீன எல்லையில் இயல்புநிலையை மீட்டெடுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே பரந்த கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். இந்திய ராணுவம் சாா்பில் ‘சா... மேலும் பார்க்க