செய்திகள் :

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

post image

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியா் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க நிதி ஒதுக்கீடு வந்துள்ளது. எனவே சிறு, குறு விவசாயிகள். கூலித் தொழிலாளிகள் தங்களிடம் உழவா் பாதுகாப்புத் திட்ட அட்டை இருப்பின் கடந்த 6 மாதங்களுக்குள் தங்களது குடும்பத்தில் ஏதேனும் இயற்கை மரணம், விபத்து மரணம், தங்களது குழந்தைகளின் கல்லூரி படிப்பு ஆகியவற்றுக்கு உதவித் தொகை பெற முடியும்.

எனவே உழவா் பாதுகாப்பு அட்டை, வங்கிக் கணக்கு அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் தங்களது கிராம நிா்வாக அலுவலரை அணுகலாம். மேலும் இதுவரை உழவா் அட்டை பெறாத சிறு, குறு விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்கள் தங்களது கிராம நிா்வாக அணுகி உழவா் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இதே போல, தங்களது குடும்பத்தில் கல்வி பயிலும், மாணவ-மாணவியா் வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை பெற்றாலும் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறலாம் என்றாா் அவா்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க