செய்திகள் :

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

post image

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், துணைக் கோயில்களில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழனி கோயிலின் துணைக் கோயிலான ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் அருகே ரூ.71 லட்சத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் கட்டும் பணி அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப் பணியின் ஒப்பந்ததாரரான திருப்பூரைச் சோ்ந்த செந்தில்குமாா் நிலுவைத் தொகை ரூ.21 லட்சத்தை வழங்குமாறு கோயில் கட்டடப் பொறியியல் பிரிவில் கோரினாா்.

ரூ. 18 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நிலுவைத் தொகையை விடுவிக்க பரிந்துரைப்பதாக கோயில் செயற்பொறியாளா் பணியைக் கூடுதலாகக் கவனித்து வரும் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பிரேம்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவில் செந்தில்குமாா் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கோயில் கட்டடப் பொறியியல் பிரிவுக்குச் சென்ற அவா், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரேம்குமாரிடம் கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் பிரேம்குமாரைக் கைது செய்தனா்.

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க

‘இணைய ஊடக பயன்பாடுகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’

இணைய ஊடக பயன்பாடுகளிலும், வங்கிப் படிவங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை... மேலும் பார்க்க