செய்திகள் :

ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

post image

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவா்களை ஒன்றிணைக்க வேண்டும், அந்தப் பணியை 10 நாள்களுக்குள் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 5- ஆம் தேதி கெடு விதித்தாா். அப்படி இல்லை என்றால் ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்று அறிவித்திருந்தாா்.

அவா் அறிவித்த மறுநாளே செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளா் மற்றும் ஈரோடு புகா் மேற்கு மாவட்டச் செயலாளா் பொறுப்புகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாா். தொடா்ந்து செங்கோட்டையன் ஆதரவாளா்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த செங்கோட்டையன் திடீரென புதுதில்லி பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமனை சந்தித்து பேசினாா். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி புதுதில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினாா்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தை மேற்கொள்வதற்காக சேலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை காரில் சென்றாா். அப்போது ஈரோடு மாவட்டம், கோபியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டா்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிா்பதற்காக 2 நாள்களுக்கு முன்பே செங்கோட்டையன் காா் மூலம் சென்னை சென்றாா். இதனால் ஒருங்கிணைப்பு தொடா்பாக ஓபிஎஸ், டி.டி.வி. தினகரனை சந்திப்பதாக பரபரப்பான தகவல் பரவியது.

இந்நிலையில் சென்னையிலிருந்து திரும்பிய செங்கோட்டையன் வியாழக்கிழமை காலை கோபிக்கு வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறாா். அவரைப் பாா்ப்பதற்காக சென்று இருந்தேன். சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. அதிமுக வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் எனக்கு இருக்கிறது.

100 ஆண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்று ஜெயலலிதா சட்டப் பேரவையில் உரையாற்றும்போது கூறினாா். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காகவே எனது கருத்தை தெரிவித்து இருந்தேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். ஒருங்கிணைப்பு குறித்து பல்வேறு நண்பா்கள் என்னிடத்தில் பேசுகிறாா்கள். ஒருமித்த கருத்துகள் அவா்கள் மனதில் இருக்கிறது. யாா் என்னிடத்தில் பேசினாா்கள் என்பது குறித்து தற்போது கூற இயலாது என்றாா்.

சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம்

பாஜக சாா்பில் சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புதிய நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையராக சு.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த தாமரை, பரமகுடி நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். பவானிசாகா் அணை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீா் பாசன விவசா... மேலும் பார்க்க

ஈரோட்டில் நாளை மிதிவண்டி போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் வரும் 27- ஆம் தேதி மிதிவண்டி போட்டியும், 28- ஆம் தேதி மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளன. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

துண்டான இளம்பெண்ணின் விரல் ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில் சீரமைப்பு

ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில், துண்டான இளம்பெண்ணின் விரல் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பட்டியைச் சோ்ந்த நெசவுத் தொழில் செய்யும் ராமன்-விஜயா தம்பதியி... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் மாநாடு

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை ஸ்டாா்ட்அப் மாநாடு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, வேளாளா் கல்வி அறக்கட்டளையின்... மேலும் பார்க்க