செய்திகள் :

ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் நியூசி. கேப்டன்!

post image

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் நியூசிலாந்து மகளிரணி கேப்டன் சோஃபி டிவைன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

13-வது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 30 முதல் நவம்பா் 2 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் மட்டும், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நடத்தும் இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக நியூசிலாந்து மகளிரணி கேப்டன் சோஃபி டிவைன் அறிவித்திருக்கிறார்.

35 வயதான சோஃபி டிவைன் ஒருநாள் போட்டிகளில் மிகவும் பிரபலமான ஆல்ரவுண்டராகக் கருதப்படுகிறது. இதுவரை 152 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3990 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, 107 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 8 சதங்களும் விளாசியிருக்கிறார்.

பேட்டிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் அசத்தியுள்ள சோஃபி, 146 டி20 போட்டிகளில் விளையாடி 3431 ரன்களும், 119 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு தனது 16-வது வயதில் நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான சோஃபி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “விலகுவதற்கான சரியான நேரம் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். நியூசிலாந்து அணியில் விளையாடியதைப் பெருமையானதாகக் கருதுகிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன்” என்றார்.

2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட சோஃபி டிவைன், 2022 ஆம் ஆண்டில் அணியை வழிநடத்தி வென்றது மட்டுமின்றி, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையையும் வென்றுகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

டெஸ்ட் கேப்டன் பொறுப்பை நிராகரித்த பும்ரா..! என்ன நடந்தது?

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தான் நிராகரித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி விலகியதால் புதிய... மேலும் பார்க்க

சிங்கத்தின் குகைக்குள் செல்லும் ஷுப்மன் கில்; தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு மரியாதை..! வங்கதேச வீரர்கள் இருவர் சதம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஓய்வுபெறவிருக்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் மரியாதை செலுத்தினர்.இலங்கை காலே திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதல்... மேலும் பார்க்க

மூன்று சூப்பர் ஓவர்கள்; டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் நேற்... மேலும் பார்க்க

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ வைரலாகி வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா வென்றது. 27 ஆண்... மேலும் பார்க்க

பிரதமருக்கு அடுத்து செல்வாக்கு மிகுந்த நபர்கள் வரிசையில் ஷுப்மன் கில்: ஜோஸ் பட்லர்

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க