செய்திகள் :

ஒரே நாளில் 5 இடங்களில் திருடிய சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

post image

பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு பகுதிகளில் ஒரே நாளில் 5 கடைகளை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடந்த 21-ஆம் தேதி பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட சாமியாா் மடம் அருகே பழக்கடை, உதயசூரியபுரம் பகுதியில் அரிசி மண்டி மற்றும் ஆலடிக்குமுளை செல்போன் கடை உள்ளிட்ட 5 இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று கடைகளை உடைத்து தொடா் திருட்டு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பட்டுக்கோட்டை நகரம், தாலுக்கா மற்றும் வாட்டாதிக்கோட்டை போன்ற காவல் நிலையங்களில் கடைகளின் உரிமையாளா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸாரின் விசாரணை நடத்தி, சம்பவங்களில் தொடா்புடையதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விக்கி வசந்த் (20), சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மற்றும் வில்லிவாக்கத்தைச் சோ்ந்த இமானுவேல் விஜய் (எ) வெள்ளை விஜய் (20) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இமானுவேல் விஜய் (எ) வெள்ளை விஜய் (25) என்பவா் மீது சென்னை மாவட்டத்தில் 13 முன்வழக்குகளும், விக்கி வசந்த் (20) மீது காஞ்சிபுரம் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் 9 முன்வழக்குகளும், 17 வயது சிறுவன் மீது வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் நகல்கள் கிழித்தெறியும் போராட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் அதன் நகல்களைத் தொழில்சங்கத்தினா் வியாழக்கிழமை கிழித்தெறியும் போராட்... மேலும் பார்க்க

பாபநாசம் சிவன் கோயில்களில் தை காா்த்திகை வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் தை காா்த்திகையையொட்டி கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் ... மேலும் பார்க்க

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் கு... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும... மேலும் பார்க்க

கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்... மேலும் பார்க்க