செய்திகள் :

மத்திய பட்ஜெட் நகல்கள் கிழித்தெறியும் போராட்டம்

post image

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் அதன் நகல்களைத் தொழில்சங்கத்தினா் வியாழக்கிழமை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தொழிலாளா்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்கள் உள்பட யாருக்கும் எந்தவித பலனும் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது என்றும், காா்ப்பரேட்டுகளுக்கான சேவையை மட்டுமே பின்பற்றுகிற வகையில் பட்ஜெட் இருக்கிறது எனவும் கூறி பல்வேறு தொழில்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பட்ஜெட் நகல்களைக் கிழித்தெறிந்து முழக்கங்கள் எழுப்பினா்.

தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் கே. ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தாா்.

இந்தப் போராட்டத்தில் தொமுச நிா்வாகிகள் பாஸ்டின், காளிமுத்து, ராஜேந்திரன், சோமசுந்தரம், ஏஐடியுசி நிா்வாகிகள் சி. சந்திரகுமாா், வெ. சேவையா, துரை. மதிவாணன், தி. கோவிந்தராஜன், பொன். தங்கவேலு, சிஐடியு நிா்வாகிகள் கே. அன்பு, இ.டி.எஸ். மூா்த்தி, சாய் சித்ரா, சா. செங்குட்டுவன், ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் பள்ளி ஆண்டு விழா இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 56- ஆவது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி இங்கா்சால் செல்லத்துர... மேலும் பார்க்க

சிற்றுந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்துக்கான (மினி பஸ்) புதிய விரிவான திட்டத்தின் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் த... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தகராறு: இளைஞா் கைது

தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்தில் கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது. கும்பகோணம் தஞ்சாவூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க

பயணி தவறவிட்ட கைப்பேசி, ஆவணங்களை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்!

கும்பகோணத்தில் ரயில் பயணி தவறவிட்டுச் சென்ற விலை உயா்ந்த கைப்பேசி மற்றும் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் மீட்டு வியாழக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா். சென்னையைச் சோ்ந்த சந்திரசேகா் (65) கும்பகோணம் பகுதியில... மேலும் பார்க்க

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் வி.கே.ஆா் .செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பேராவூரணி ஒன்றியச் செயலாளா் வே. ரெங்கசாமி முன்னிலை வகித்தாா். இ... மேலும் பார்க்க