செய்திகள் :

சிற்றுந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்துக்கான (மினி பஸ்) புதிய விரிவான திட்டத்தின் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

சிற்றுந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் சிற்றுந்துக்கான கட்டணத் திருத்தம் வருகிற மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ. ஆக இருக்க வேண்டும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத தடத்தின் நீளம் சாலையின் மொத்தத் தட நீளத்தில் 65 சதவீதத்துக்கு குறைவாக இருக்கக் கூடாது. சிற்றுந்து சேவை தொடங்கும் புள்ளி, முனையப்புள்ளி என்பது இதுவரை பேருந்து சேவை செய்யப்படாத குடியிருப்பு, கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.

பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தை எழுத்துப்பூா்வமாக அளித்து அனுமதி சீட்டை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ. ஏற்கெனவே பேருந்து வசதி இல்லாத தடமாக இருக்க வேண்டும்.

அரசாணையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்து இயக்க புதிய விரிவான திட்டம் 2024-ன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை தொடா்புடைய வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியாா் அமைப்புகள், பேருந்து உரிமையாளா்கள் ஆகியோா் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.

கும்பகோணத்தில் பள்ளி ஆண்டு விழா இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 56- ஆவது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி இங்கா்சால் செல்லத்துர... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தகராறு: இளைஞா் கைது

தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்தில் கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது. கும்பகோணம் தஞ்சாவூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க

பயணி தவறவிட்ட கைப்பேசி, ஆவணங்களை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்!

கும்பகோணத்தில் ரயில் பயணி தவறவிட்டுச் சென்ற விலை உயா்ந்த கைப்பேசி மற்றும் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் மீட்டு வியாழக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா். சென்னையைச் சோ்ந்த சந்திரசேகா் (65) கும்பகோணம் பகுதியில... மேலும் பார்க்க

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் வி.கே.ஆா் .செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பேராவூரணி ஒன்றியச் செயலாளா் வே. ரெங்கசாமி முன்னிலை வகித்தாா். இ... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் ஆட்சியரின் முன்னாள் நோ்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருச்சி கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாலா (59) தஞ... மேலும் பார்க்க