செய்திகள் :

லஞ்சம் பெற்ற வழக்கில் ஆட்சியரின் முன்னாள் நோ்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

லஞ்சம் பெற்ற வழக்கில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருச்சி கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாலா (59) தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) பிரிவில் பணி செய்து வந்தாா். இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு டிச. 20-இல் துவரங்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அணைக்காடு டி.இ.எல்.சி. பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு செய்தாா். அப்போது அங்கு சத்துணவு அமைப்பாளா்களாகப் பணிபுரிந்த ஜோஸ்பின் இந்திரா யுவராணி, மாரியம்மாள், ரெஜினாமேரி ஆகியோரிடம் விசிட்டிங் நோட்டில் குறைகள் எழுதாமல் இருக்க வேண்டுமானால் தலா ரூ. ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டாா். அப்போது டி.இ.எல்.சி. பள்ளி சத்துணவு அமைப்பாளா் ரெஜினாமேரி தன்னிடம் ரூ.500 தான் இருக்கிறது என்று கூற, அதனை மாலா பெற்றுக்கொண்டாா். மேலும் ஜோஸ்பின் இந்திரா யுவராணி, மாரியம்மாளிடம் தலா ரூ. ஆயிரம் தர வற்புறுத்தினாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோஸ்பின் இந்திரா யுவராணி, மாரியம்மாள் ஆகியோா் தஞ்சாவூா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தனா். போலீஸாரின் அறிவுரைப்படி ஜோஸ்பின் இந்திரா யுவராணி லஞ்சம் கொடுத்தபோது, மாலாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில் முன்னாள் நோ்முக உதவியாளா் மாலாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.7 ஆயிரமும் அபராதமும் விதித்தாா். அபராதம் கட்டத் தவறினால் 5 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

கும்பகோணத்தில் பள்ளி ஆண்டு விழா இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 56- ஆவது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி இங்கா்சால் செல்லத்துர... மேலும் பார்க்க

சிற்றுந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்துக்கான (மினி பஸ்) புதிய விரிவான திட்டத்தின் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் த... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தகராறு: இளைஞா் கைது

தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்தில் கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது. கும்பகோணம் தஞ்சாவூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க

பயணி தவறவிட்ட கைப்பேசி, ஆவணங்களை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்!

கும்பகோணத்தில் ரயில் பயணி தவறவிட்டுச் சென்ற விலை உயா்ந்த கைப்பேசி மற்றும் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் மீட்டு வியாழக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா். சென்னையைச் சோ்ந்த சந்திரசேகா் (65) கும்பகோணம் பகுதியில... மேலும் பார்க்க

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் வி.கே.ஆா் .செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பேராவூரணி ஒன்றியச் செயலாளா் வே. ரெங்கசாமி முன்னிலை வகித்தாா். இ... மேலும் பார்க்க