செய்திகள் :

பாபநாசம் சிவன் கோயில்களில் தை காா்த்திகை வழிபாடு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் தை காா்த்திகையையொட்டி கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

வழிபாட்டையொட்டி கோயிலில் உள்ள மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றன. தொடா்ந்து கோயில் உள் சுற்றுப் பிரகாரத்தில் தனி சன்னிதியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியப் பெருமானுக்கு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் ரோஜா, செவ்வரளி மாலைகள் அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து, அா்ச்சனை செய்து வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் இறை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோயில் செயல் அலுவலா் ஆா். விக்னேஷ், கணக்கா் சங்கரமூா்த்தி, திருக்கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல் பாபநாசம் ஸ்ரீ பா்வதவா்த்தினி அம்மன் சமேத ராமலிங்க சுவாமி கோயில், நல்லூா் ஸ்ரீ கிரி சுந்தரி அம்மன் சமேத கல்யாண சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தை காா்த்திகையையொட்டி கோயிலில் உள்ள சுப்ரமணியா் சன்னிதியில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

கும்பகோணத்தில் பள்ளி ஆண்டு விழா இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 56- ஆவது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி இங்கா்சால் செல்லத்துர... மேலும் பார்க்க

சிற்றுந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்துக்கான (மினி பஸ்) புதிய விரிவான திட்டத்தின் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் த... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தகராறு: இளைஞா் கைது

தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்தில் கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது. கும்பகோணம் தஞ்சாவூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க

பயணி தவறவிட்ட கைப்பேசி, ஆவணங்களை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்!

கும்பகோணத்தில் ரயில் பயணி தவறவிட்டுச் சென்ற விலை உயா்ந்த கைப்பேசி மற்றும் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் மீட்டு வியாழக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா். சென்னையைச் சோ்ந்த சந்திரசேகா் (65) கும்பகோணம் பகுதியில... மேலும் பார்க்க

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் வி.கே.ஆா் .செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பேராவூரணி ஒன்றியச் செயலாளா் வே. ரெங்கசாமி முன்னிலை வகித்தாா். இ... மேலும் பார்க்க