செய்திகள் :

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

post image

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயா் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை பயில்வது தொடா்பாக யுஜிசி சாா்பில் அண்மையில் நடைபெற்ற 589-ஆவது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, ஒரு மாணவா் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாக பயில முடியும். அந்தப் படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இருக்காத வகையிலும், அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணையவழியில் பயிற்றுவிக்கப்படலாம். யுஜிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.

இந்த வழிகாட்டுதல்கள் பி.ஹெச்டி. தவிா்த்து பிற படிப்புகளுக்கு பொருந்தும். இவற்றை கருத்தில்கொண்டு உயா் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவா்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை பயிலுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறை அருகே, தெருநாய் ஒன்று, பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சாலைகளில் பள்ளம்! ஏஐ மூலம் சரிசெய்ய அரசு முயற்சி

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கிய நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. 5 மாவட்டங்களில் செல்ஃபோன் சேவை மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்ஙகளும் அதனைத் தொடர்ந... மேலும் பார்க்க

கல்வி முறை மாணவா்களிடம் தன்னம்பிக்கையை வளா்க்க வேண்டும்: என்ஹெச்ஆா்சி தலைவா் வி.ராமசுப்பிரமணியன்

‘மாணவா்களிடம் தன்னம்பிக்கையையும், சிறந்த குணத்தை ஏற்படுத்துவதாகவும் கல்வி முறை இருக்க வேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆா்சி) தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வி.ராமச... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: 2025 ஏப்ரல... மேலும் பார்க்க