செய்திகள் :

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!

post image

அமெரிக்காவில் நடைபெறும் 2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகளுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்ஸில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான இடம்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கலிஃபொர்னியாவில் கிரிக்கெட் போட்டிகள்

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள போமோனா நகரத்தில் ஃபேர்கிரௌண்ட்டில்தான் இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த நகரம் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 48 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஃபேர்கிரௌண்ட் அல்லது ஃபேர்ப்ளெக்ஸ் எனப்படும் இடங்கள் பொதுவாக பொதுக்கூட்டங்கள், வணிக விளம்பரங்கள், கல்வி, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருக்கின்றன.

போமோனாவில் உள்ள இந்த இடத்தில் இதுவரை கிரிக்கெட் திடலுக்கான நோக்கத்துடன் எந்த பிட்சும் அமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லைகளைத் தாண்டும் கிரிக்கெட்

இது குறித்து ஜெய் ஷா கூறியதாவது:

ஒலிம்பிக்ஸில் மீண்டும் கிரிக்கெட் வருவதற்காக முக்கியமான படியான 2028 ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு. அது ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும்போது வழக்கமான தனது எல்லைகளைத் தாண்டும். அதுவும் புதுமையான டி20 வடிவில் அறிமுகமாவதால் புதிய பார்வையாளர்களை கிரிக்கெட் சென்றடையும்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 1990இல் மட்டுமே கிரிக்கெட் பங்கேற்றுள்ளது. தற்போது, 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டுடன் மற்ற 4 விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் திலீப் மற்றும் உதவிப் பணியாளர் சோஹம்... மேலும் பார்க்க

46 வயதில் தந்தையான ஜாகீர் கான்! குவியும் வாழ்த்துகள்!

முன்னாள் இந்திய வீரரும் லக்னௌ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சஹாரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார். பிறகு மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

முதல் முறையாக டி20 தொடருக்காக வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இருதரப்பு தொடருக்காக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட த... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ஐசிசியின் சார்பில் விருது வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்... மேலும் பார்க்க

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் விலகல்!

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின... மேலும் பார்க்க