செய்திகள் :

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

post image

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த 1 -ஆம் தேதி புறப்பட்ட இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் ஜன்னல் ஓரம் பயணம் செய்துள்ளாா்.

அந்த ரயில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே பாலம் நோக்கி இரவு 8.30 மணி அளவில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

அப்போது ரயிலில் நின்றபடி பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞா், ஜன்னல் ஓரத்தில் பயணம் செய்த பெண் அணிந்திருந்த 8 பவுன் தங்கத் சங்கிலியை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பினாா்.

ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் பாதிக்கப்பட்ட பெண், ரயில்வே போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவிரி ரயில் நிலையத்துக்கும், ஈரோடு ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் உள்ளதால் இந்தப் பகுதியில் ரயில்கள் மெதுவாகவே இயக்கப்படுகின்றன. இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் அவ்வப்போது பயணிகளிடம் நகையை பறித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது.

எனவே, காவிரி ரயில் நிலையம் மற்றும் காவிரி ஆற்றுப்பாலம் பகுதியில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, குமலன்குட்டை, செல்லபண்ணகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52)... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 22,451 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 22,451 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழப்பு

சென்னிமலை அருகே தென்னந்தோப்புக்குள் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்தது. சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், ஆண்டிகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி,... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்கள்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஏஐடியூசி அமைப்பைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை அட்டையை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

இணைய சேவைத் தேடி 5 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் பழங்குடியின மக்கள்

கோ்மாளம் ஊராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் இணையதள சேவைத் தேடி சுமாா் 5 கி.மீ.தொலைவு நடந்து சென்று வருகின்றனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் ஊராட்சியில் உள்ள கானக்கரை, ஜேஆா்எஸ் புரம், ப... மேலும் பார்க்க