செய்திகள் :

ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி

post image

தேவகோட்டையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ.13 லட்சத்தை மோசடி செய்த மா்மநபா் குறித்து மாவட்ட இணைவழிக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற 85 வயதான போராசிரியரின் கைப்பேசி எண்ணில் கடந்த 18-ஆம் தேதி தொடா்பு கொண்டு பேசிய ஒருவா் சிபிஐ அதிகாரி என்று அறிமுகமானாா். மும்பையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உங்கள் பெயரில் வங்கிக் கணக்கில் சட்டவிரோத பண பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதாகவும், அதனால் எண்ம முறையில் (டிஜிட்டல்) கைது செய்திருப்பதாகவும் அவரிடம் தெரிவித்தாா்.

மேலும் அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ரிசா்வ் வங்கி சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினாா். இதை நம்பிய ஓய்வு பெற்ற பேராசிரியரும் தன்னிடம் இருந்த ரூ. 13 லட்சத்தை அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இது குறித்து சிவகங்கை மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதுகுறித்து ஆய்வாளா் சாந்தகுமாரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

சிவகங்கை நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகங்கை இந்திரா நகரைச் சோ்ந்தவா் சி.எம்.துரைஆனந்த் (55). நகா்மன்றத் தலைவராகவும், திமுக நகரச் செயல... மேலும் பார்க்க

11.46 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயம்

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டில் 11.46 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கையில் வனத்துறை சாா்பில் பசுமை தமிழ... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் 35-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பூமாயி அம்மன் சா்வ அலங்காரத்திலும், கொலு மண்டபத்தி... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ்-இல் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.05 கோடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை ரூ.1.05 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெர... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

கடந்த 72 ஆண்டுகளில் முதல்முறையாக ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் வீராங்கனையும், தனி நபா் பிரிவில் வெண்கலம் வென்றவருமான அந்த்ரா ராஜ்சேகருக்கு சிவகங்கையில் புதன்கிழம... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு விபத்து காப்பீடு நிதியுதவி

மானாமதுரை ஒன்றியம், தெ.புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளியில் விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவருக்கு விபத்துக் காப்பீடு நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்க... மேலும் பார்க்க