செய்திகள் :

ரணகளம்... முதல்வரின் ஏஐ விடியோவை பகிர்ந்த உதயநிதி!

post image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செய்யறிவு(ஏஐ) காணொலியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக இளைஞர்கள் மத்தியில் கூகுளின் ஜெமினி 2.5 ஏஐ தளம் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏஐ மூலம் புகைப்படங்களில் எடிட் செய்வது, பல புகைப்படங்களை இணைத்து தேவைக்கேற்ப புகைப்படம் அல்லது காணொலியை உருவாக்குவது போன்றவை டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் ஏஐ காணொலி ஒன்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த காணொலி, மு.க. ஸ்டாலின் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தில் தொடங்கி, கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புகைப்படத்துடன் நிறைவுபெறுகிறது.

சுமார் 39 நொடிகளுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த காணொலியில், இளம் வயதில் ஸ்டாலின் கைதாகும் புகைப்படம், திமுக கூட்டங்களில் பேசுவது, மேயர், எம்.எல்.ஏ., முதல்வராகும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த காணொலிக்கு, நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த ’ரணகளம்’ என்ற தலைப்பில் வெளியான பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட காணொலி வைரலாகி வரும் நிலையில், அவரது பதிவுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

சில நாள்களுக்கு முன்னதாக, உதயநிதி அவருடைய வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ’ரெளடி டைம்’ எனக் குறிப்பிட்டிருந்தது வைரலானது.

Tamil Nadu Chief Minister M.K. Stalin's AI video was shared by Deputy Chief Minister Udhayanidhi Stalin on social media.

இதையும் படிக்க : ரெளடி டைம்! என்ன சொல்கிறார் உதயநிதி!

தமிழக கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! - முதல்வர் பெருமிதம்

தமிழக அரசு அறிவித்த தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் உள்ள முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ப... மேலும் பார்க்க

தடுப்பூசி போட்ட 2 வயதுக் குழந்தை பலி: உறவினர்கள் போராட்டம்!

திருப்பத்தூரில் தடுப்பூசி போட்டதால் 2 வயதுக் குழந்தை உயிரிழந்ததாகவும், நீதி கேட்டு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு ப... மேலும் பார்க்க

பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

தமிழக அரசின் முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பீலா... மேலும் பார்க்க

டிடிவி தினகரனுடன் சந்திப்பா? செங்கோட்டையன் விளக்கம்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச் செ... மேலும் பார்க்க

சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது?

தில்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், நேற்றிரவு தரையிறங்க முடியாமல் 30 நிமிடங்கள் வட்டமடித்த பின்னர், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.இந்த விமானம் சென்னையில் தரையிறங்காமல் வட்டமடித்த... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில... மேலும் பார்க்க