செய்திகள் :

ஓரங்கட்டப்படும் முக்கிய நிர்வாகி?கல்விப் புள்ளிக்கு பொறுப்பு - TVKவின் புதிய நிர்வாகக் குழு பட்டியல்

post image

கரூர் சம்பவத்துக்கு பிறகு செயல்படாமல் முழுமையாக முடங்கியிருந்த விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்க 28 நிர்வாகிகள் அடங்கிய நிர்வாகக் குழு ஒன்றை விஜய் இப்போது அறிவித்திருக்கிறார்.

TVK Vijay
TVK Vijay

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகே அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை செய்வோம் என தவெக தரப்பு கூறி வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் வரவைத்து விஜய் ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றிலிருந்து மற்ற விவகாரங்கள் குறித்தும் தவெக தரப்பு பேச ஆரம்பித்திருக்கிறது. நெல் கொள்முதலை முன்வைத்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

புதிய நிர்வாகக் குழு

அதேமாதிரி, நேற்று மாலையில் 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழு ஒன்றையும் விஜய் அறிவித்திருக்கிறார். கட்சியின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் தன்னுடைய உத்தரவின்படி கவனிப்பதற்காக இந்த குழு என விஜய் கூறியிருக்கிறார்.

பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் என முக்கிய நிர்வாகிகளும் 15 க்கும் மேற்பட்ட மா.செக்களும் அந்த நிர்வாகக்குழுவில் இடம்பிடித்திருக்கின்றனர்.

TVK Vijay
TVK Vijay

இந்தப் பட்டியலில் சில கவனிக்கத்தக்க அம்சங்களும் இருக்கிறது. விஜய்க்கு நெருக்கமான நிர்வாகியாக அறியப்பட்ட பொருளாளர் வெங்கட்ராமன், துணைப் பொருளாளர் ஜெகதீஷ் ஆகியோரின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை. கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை என வெங்கட்ராமன் அதிருப்தியில் இருந்ததாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர். அதனால் மற்ற தலைமைக்கழக நிர்வாகிகளுடன் சேராமல் தனித்தே செயல்பட்டு வந்தார்.

கரூர் குடும்பங்களை விஜய் சந்தித்த போது கூட அந்த கூட்டத்திற்கு வந்த வெங்கட்ராமனை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையாகியிருந்தது.

TVK Vijay
TVK Vijay

அதேமாதிரி, சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் மரிய வில்சனுக்கும் சென்னை மாவட்டத்தின் நிர்வாகக்குழு பொறுப்பை விஜய் கொடுத்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்திருக்கும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் நிர்வாகக்குழுவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விஜய் அறிவித்திருக்கும் இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூர் அலுவலகத்தில் நடக்கிறது. கட்சியில் கட்டமைப்புரீதியாக சில மாற்றங்களை செய்ய விஜய் முடிவெடுத்திருப்பதாகவும் அது சம்பந்தமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க