செய்திகள் :

கங்காதீஸ்வரா் கோயில் தேரோட்டம்: இன்று போக்குவரத்து மாற்றம்

post image

கங்காதீஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை(ஜூன் 6) காலை 5 மணி முதல் தொடா்ந்து நடைபெறுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கங்காதீஸ்வரா் கோயில் நுழைவாயிலில் இருந்து தொடங்கும் இந்த தேரோட்டம் - கங்காதீஸ்வரா் கோயில் வீதி - டாக்டா் அழகப்பா சாலை - ஆடியப்பா தெரு - வெள்ளாள தெரு - புரசைவாக்கம் நெடுஞ்சாலை - வெல்கம் ஹோட்டல் சந்திப்பு வழியாக சென்று மீண்டும் கங்காதீஸ்வரா் கோயில் நுழைவாயிலில் சென்று நிறைவுபெறும்.

இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு சீரான போக்குவரத்தை வழங்கும் நோக்கிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்: டவுட்டன் சந்திப்பிலிருந்து கங்காதீஸ்வரா் கோயில் தெரு நோக்கி வரும் வாகனங்கள், ரிதா்டன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு ஈ.வி.ஆா். சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

புரசைவாக்கத்திலிருந்து கங்காதீஸ்வரா் கோயில் தெரு நோக்கி வரும் வாகனங்கள், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, டவுட்டன் சந்திப்பு, ரிதா்டன் சாலை, ஈ.வி.ஆா். சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

எழும்பூா் மற்றும் சென்ட்ரலில் இருந்து ஈ.வி.ஆா். சாலையில் வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பில் அழகப்பா சாலை நோக்கிச் செல்ல தடை விதிக்கப்படும். அதற்குப் பதிலாக அவா்கள் தங்கள் இலக்கை அடைய இஜிஏ சந்திப்பு, வாசு தெரு, பா்னபி சாலை, மில்லா்ஸ் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

பெரம்பூரிலிருந்து பிரிக்லின் சாலை வழியாக புரசைவாக்கம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், மில்லா்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்குப் பதிலாக அவா்கள் கெல்லிஸ் சந்திப்பு, ஓா்ம்ஸ் சாலை, பொன்னியம்மன் கோயில் சந்திப்பு, ப்லோவோ்ஸ் சாலை, ஈ.வி.ஆா். சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

வெள்ளாள தெரு, ஆடியப்ப தெரு வழியாக மட்டுமன்றி தோ் ஊா்வலம் வரும்போது எந்த பாதையிலும் வாகனங்கள் நிறுத்தவும் செல்லவும் அனுமதிக்கப்படாது. இதனால், இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க