செய்திகள் :

கச்சேரிகளுக்கு பொழுதுபோக்கு வரி 10%: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

post image

சென்னையில் நடைபெறும் கச்சேரிகளுக்கு 10 சதவீதம் பொழுதுபோக்கு வரி வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு கேளிக்கை வரிச் சட்டம் 2017-இன்படி, சென்னை மாநகராட்சியில் 2017 ஜூலை 1 முதல் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கேளிக்கை வரிச் சட்டத்தின் பிரிவு 2 (8) மற்றும் 3 (10) கீழ் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 2025 ஏப்.17 முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மாவட்ட அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவு 2 (8)-இன்படி, கட்டணம், பங்களிப்பு, சந்தா அல்லது வேறு வகையான கட்டணங்கள் வசூலித்து நுழைவதற்கான அனுமதி வழங்கப்படும். மண்டபங்கள், பள்ளி-கல்லூரி மேடைகள், அரங்கங்கள், வளாகங்கள் அல்லது பிற இடங்களில் நடத்தப்படும் கச்சேரிகள், நாடகங்கள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பிரிவு 3 (10)-இன்படி ஏதேனும் நிறுவன வளாகத்தில் அல்லது பிற இடங்களில் நடத்தப்படும் கச்சேரி, நாடகம், மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 10 சதவீதம் பொழுதுபோக்கு வரி வசூலிக்கப்படும்.

இந்த சட்டத் திருத்தத்தின்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள கல்வி நிலையங்கள், கல்லூரி வளாக அரங்கங்களில் அல்லது பிற இடங்களில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்யப்படும் நுழைவுச் சீட்டில் 10 சதவீதம் கேளிக்கை வரியாக வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க