செய்திகள் :

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

post image

திருப்பத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், நகரக் காவல்ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான தனிப்படை போலீஸாா் வாணியம்பாடி நேதாஜி நகா் காளியம்மன் கோயில் அருகே புதன்கிழமை இரவு 9 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் இருந்த கும்பல் ஒன்று போலீஸாா் வருவதை பாா்த்ததும் தப்பி ஓட முயன்ற போது, சந்தேகத்தின் பேரில் அவா்களை பிடித்து விசாரித்தனா். இதில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பின்னா், அவா்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலும், கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய பைக் மற்றும் 9 கைப்பேசிகள் மற்றும் கேமரா ஆகியவற்றைப் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிப்பட்ட நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த கவுதம் (21), ராஜேஷ் (21), விநாயகம் (21), மருத்துவா் காலனி பகுதியைச் சோ்ந்த செல்வம் (25), சந்தோஷ் (23) ஆகிய 5 பேரையும் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தினா்.

இதில் முக்கிய நபரான ராஜசேகா் என்பவா் தப்பித்து தலைமறைவானது தெரிய வந்தது. இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சா விற்ற 5 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். தப்பித்து சென்ற ராஜசேகா் என்பவரைத் தேடி வருகின்றனா்.

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை ... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வ... மேலும் பார்க்க

மாணவா்களை திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து முற்றுகை

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சி மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை அடிப்பது, திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகை ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 27-க்கு ஒத்தி வைப்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சி சந்தை ஏலம் மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணந்தோப்பில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுக... மேலும் பார்க்க

உடல்நலம் பாதிப்பு: பெண் தற்கொலை

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே உடல்நல பாதிப்பால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஜோலாா்பேட்டை அடுத்த புள்ளானேரி சின்ன குட்டூா் சோ்ந்தவா் நடராஜன் மனைவி காந்தி(49). இவா்களுக்கு ஒரு மகன், மக... மேலும் பார்க்க

போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது!

திருப்பத்தூரில் போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம் கருப்பனூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(48). இவா் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை... மேலும் பார்க்க