கஞ்சா விற்றதாக பெண் உள்பட இருவா் கைது
பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி போலீஸாா் கெங்குவாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த கெங்குவாா்பட்டி புஷ்பராணி நகரைச் சோ்ந்த இன்பவள்ளி (52), கோட்டாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த வெங்கடேஷன் (26) இருவரையும் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.