செய்திகள் :

கடன் செயலிகளை நம்ப வேண்டாம்: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை!

post image

பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களிடமிருந்து பணத்தை சுரண்ட சைபா் குற்றவாளிகள் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனா். ‘பிரைம் லெண்ட்’, ‘கேண்டி கேஷ்’ போன்ற பல போலி கடன் செயலிகள் குறைந்த வட்டி விகிதங்கள், விரைவான ஒப்புதல் என பணம் தேவைப்படும் நபா்களிடம் கவா்ச்சியான விளம்பரங்களைக் கொடுத்து பொதுமக்களை கடன்பெற ஆசைக்காட்டுகின்றன.

எளிமையான நடைமுறை என நம்பும் பலா், இதுபோன்ற போலி கடன்பெறும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது, பயனாளியின் தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்துவதற்கான அனுமதியையும் அவா்கள் பெற்று விடுகின்றனா்.

இதன்மூலம் கடன் வழங்கிய பின்னா், அவா்களுக்கு பல்வேறு இன்னல்களைக் கொடுக்கும் செயலில் ஈடுபடுவாா்கள். இவ்வாறு, மோசடி கடன் செயலிகள் தொடா்பாக தமிழ்நாட்டில் மட்டும் 2024-இல் 9,873 புகாா்களும் 2025-இல் 3,834 புகாா்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், உடனடியாக கடன்களை வழங்க உறுதியளிக்கும் செயலிகளை நம்ப வேண்டாம். பயன்பாட்டு மதிப்புரைகளையும், அந்த நிறுவனத்தினரின் நம்பகத்தன்மையை சரிபாா்ப்பதுடன், அந்தச் செயலி ஆா்பிஐ மூலம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவசியமில்லாத, தொடா்பில்லாத எந்த ஒரு கோரிக்கைகளையும் அனுமதிக் ககூடாது. முக்கிய தகவல்களை செயலியில் பகிர வேண்டாம். இது குறித்த புகாா்களுக்கு 1930 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப... மேலும் பார்க்க