காஸா போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்!
கடும் சரிவில் பங்குச்சந்தை! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!
வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 3) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,063.94 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.43 மணியளவில் சென்செக்ஸ் 594.88 புள்ளிகள் குறைந்து 76,911.08 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 212.95 புள்ளிகள் குறைந்து 23,269.20 புள்ளிகளில் முடிந்தது.
இன்று பங்குச்சந்தை சரிவினால் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஃப்டியில் பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதே நேரத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், எல்&டி, பிபிசிஎல், என்டிபிசி, கோல் இந்தியா ஆகியவை நஷ்டமடைந்த நிறுவனங்களாகும்.
நுகர்வோர் சாதனங்கள் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் சரிவில் உள்ளன.
பிஎஸ்இ மிட்கேப் 1 சதவீதமும், ஸ்மால்கேப் கிட்டத்தட்ட 2 சதவீதமும் சரிந்தன.
ரூபாயின் மதிப்பு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகச் சரிந்துள்ளது.