செய்திகள் :

பட்ஜெட் எதிரொலி: ரூ. 62,000-யைக் கடந்த தங்கம் விலை!

post image

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60,000-யைக் கடந்து புதிய உச்சம் தொட்டது.

அதன்பிறகும் ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று ஒரு சவரன் ரூ. 62,000-யைக் கடந்துள்ளது.

இதையும் படிக்க | மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுவது என்ன?

சென்னையில் இன்று(பிப். 1) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 61,960-க்கு விற்பனையானது.

தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று மாலை தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு சவரனுக்கு அதிரடியாக ரூ. 360 உயர்ந்து ரூ.62,320-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 7,790-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் ரூ. 107-க்கும், ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல்: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை!

பங்குச்சந்தைகள் இன்று(பிப். 1) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை வணிகம் இன்று நடைபெற்றது.மும்பை பங்குச... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை இன்று செயல்படுகின்றன. அதன்படி, பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை... மேலும் பார்க்க

பட்ஜெட்: 3-வது முறையாக சனிக்கிழமை செயல்படும் பங்குச் சந்தை!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவிருப்பதால் மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,707 கோடி

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.1,707 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து வங்கிய... மேலும் பார்க்க

பரோடா வங்கி நிகர லாபம் 6% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் நிகர லாபம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் ம... மேலும் பார்க்க

அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஜென் 3 ஸ்கூட்டர்!

புதுதில்லி: ஓலா எலக்ட்ரிக் இன்று தனது ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் ரூ.1,69,999 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.சமீபத்த... மேலும் பார்க்க