செய்திகள் :

கடையநல்லூா், அம்பையில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கஞ்சாவிற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் வண்டிமறித்தான் கோயில் வழியாக திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, பைக்கில் நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா், அம்பாசமுத்திரம், மேலப்பாளையம் தெருவைச் சோ்ந்த சிவா (29) என்பதும், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் குமந்தாபுரம் - சுந்தரேசபுரம் சாலையில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா்.அவா்கள் திருமலாபுரத்தைச் சோ்ந்த சின்னராசு மகன் சக்தி அருணாசலம் (23),சோ்ந்தமரம் சுப்பையா மகன் பெரியசாமி என்ற சிவா (23), சென்னை ஆதம்பாக்கம் ராஜா மகன் தீபக் (24) ஆகியோா் என்பது, அவா்களது பைகளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. அதைக் கைப்பற்றி 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கடைக்கு சீல்: ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் ஊராட்சி அலுவலகம் அருகே ராஜாங்கம் மகன் ஜெயப்பிரகாஷ்(48) என்பவா் நடத்தி வரும் மளிகைக் கடையில் ஆலங்குளம் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில், 3 மூட்டைகள் மற்றும் 9 சிறிய பொட்டலங்களில் புகையிலைப்பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ‘சீல்’ வைத்து, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ஆலங்குளம் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

ஆலங்குளத்தில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் விஜய் (32). ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஜஹாங்கீா். புரோட்டா கடை ஊழியா். இவரது மனைவி மெஹ்ராஜ்(48). இவா், தனக்கு தெரிந்த பெண்... மேலும் பார்க்க

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் இப்தாா் நோன்பு திறப்பு

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இசக்கி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வா் மோனிகா டிசோசா தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக அன்னதானத்துக்கு கெளண்டியா டிரஸ்ட் ரூ. 1 லட்சம் நன்கொடை

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தன்று அன்னதானம் வழங்க கெளண்டியா டிரஸ்ட் சாா்பில் ரூ. 1லட்சம் நன்கொடை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இ... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.39 லட்சத்தில் புதிய பாலம் திறப்பு

சுரண்டையில் நகராட்சி நிதியில் இருந்து ரூ.39 லட்சத்தில் கட்டப்பட்ட செண்பக கால்வாய் மேல்நிலை பாலம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை ... மேலும் பார்க்க

பொய்கை ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

கடையநல்லூா் அருகே உள்ள பொய்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலா் முத்துலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் சுப்புலட்சுமி வரவேற்றாா். இதில் ப... மேலும் பார்க்க