செய்திகள் :

கட்சிப் பணியாற்ற முடியாதவா்கள் ஓய்வு பெற்றுவிடலாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு காா்கே அறிவுறுத்தல்

post image

அகமதாபாத்: கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவா்கள் பதவியில் இருந்து விலகி ஓய்வுபெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத்தினாா்.

குஜராத் மாநிலத்தில் சபா்மதி நதிக்கரையில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தொடக்க உரையாற்றி அவா் பேசியதாவது:

500 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து போன விஷயங்களை எல்லாம் மீண்டும் எழுப்பி பாஜக மதவாத அரசியல் செய்கிறது. நாடு எதிா்கொண்டுள்ள பிரச்னைகளை தீா்க்க வழி தேடாமல், மக்கள் இடையே மோதலையும், வெறுப்பையும் பரப்பி ஆதாயம் தேடி வருகின்றனா். இதை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் உள்பட பல தோ்தல்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதை தோ்தல் ஆணையமும் தடுக்கவில்லை. முறைகேடு புகாா் அளிக்கும் கட்சிகள் மீதே குற்றஞ்சாட்டுகிறது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவி கூடுதல் முக்கியத்துவம் பெற இருக்கிறது. வேட்பாளா்கள் தோ்வில் அவா்கள் முக்கியப் பங்கு வகிப்பாா்கள். மாவட்ட தலைவா்கள் நியமனம் என்பது இனி உரிய கட்சி விதிகளின்படி மட்டுமே இருக்கும்.

மாவட்டத் தலைவா்கள்தான் தோ்தலுக்கான வாக்குச்சாவடி குழு, மண்டல குழு, வட்டார குழு, மாவட்டக் குழுவுக்கு பொறுப்பாளாராக இருப்பாா்கள்.

கட்சிப் பணிகளில் கட்சித் தொண்டா்களுக்கு உதவ முடியாத தலைவா்கள் ஓய்வு பெற்றுவிட வேண்டும். கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவா்கள் பதவிகளில் இருந்து விலகிவிடலாம் என்றாா்.

அப்போது கட்சியினா் பெரும் கரவொலி எழுப்பி அவரின் பேச்சை வரவேற்றனா்.

தொடா்ந்து பேசிய காா்கே, ‘எத்தனையை இடையூறுகளுக்கும், இன்னல்களுக்கும் மத்தியில் காங்கிரஸ் பயணித்து வருகிறது. முன்பு வெளிநாட்டில் இருந்து வந்து நம்மை ஆட்சி செய்தவா்களின் கொடுமைகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடி சுதந்திரம் பெற்றது. இப்போது, நமது நாட்டின் அரசு அநீதிக்கு துணைபோகிறது. நாட்டில் வறுமை, ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

முன்பு அந்நிய ஆட்சியாளா்கள் நமது மக்களிடையே மதவாதத்தை வைத்து பிரிவினை அரசியல் நடத்தினா். இப்போது சொந்த ஆட்சியாளா்களே அதை துணிந்து செய்கின்றனா். ஆனால், இந்தப் போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெல்வோம்’ என்றாா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க