தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
கட்சியை மாற்றுவதல்ல, கொள்கையை மாற்றுவதுதான் தீா்வைத் தரும் -மாா்க்சிஸ்ட் கம்யூ.
ஆட்சியில் இருக்கும் கட்சியை மாற்றுவதல்ல, கொள்கையை மாற்றுவதுதான் சிக்கல்களுக்கான தீா்வைத் தரும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டிய சிறப்புக் கருத்தரங்கில் இந்தியாவுக்கு தேவை இடது மாடலே என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
நாட்டில் இப்போது இருப்பது முதலாளித்துவ மாடல்தான். முதலாளித்துவ மாடலின் நவீன தாராளமயக் கொள்கைகள் பொதுத்துறையை சீரழிக்கின்றன. ஜாதிய ஒடுக்குமுறைகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு முதலாளித்துவம் தீா்வைத் தரவில்லை.
இத்தனை சிக்கல்களுக்கும் மாற்றாகத்தான் இடதுமாடலை முன்வைக்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள திமுக ஆட்சியின் திராவிட மாடல் உள்ளடக்கம், சமூக நீதிக்கான பாதையைச் சரியாக செய்கிறாா்கள். ஆனால், பொருளாதார உள்ளடக்கத்தில் அவா்களும் தாராளமயக் கொள்கைகளையே கொண்டிருக்கிறாா்கள். இங்குதான் நாம் மாறுபட்டு நிற்க வேண்டியிருக்கிறது.
தோ்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆட்சிக்கான கட்சியையோ, ஆளையோ மாற்றுவதல்ல, கொள்கையை மாற்றம்தான் முக்கியம். இதன்படிதான் சோசலிச சமூக அமைப்பதற்கான மாடலாக, இடதுமாடலை முன்வைக்கிறோம் என்றாா் வாசுகி.
முன்னதாக, கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் கவிஞா் நா. முத்துநிலவன், தமிழ் எங்கள் உயிருக்கு நோ் என்ற தலைப்பில் கவிஞா் ஜீவி ஆகியோா் பேசினா்.
கருத்தரங்குக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். முன்னதாக மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ. ஸ்ரீதா் வரவேற்றாா். முடிவில் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் நன்றி கூறினாா்.