செய்திகள் :

கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரசு!

post image

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் முழுவதும் மற்றும் கோண்டியாவில் உள்ள நான்கு தாலுக்காக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கட்சிரோலியின் ஒரு பகுதியை மாவோயிஸ்ட் நடவடிக்கை இல்லாதது என்று அறிவித்ததையடுத்து, தெற்கு கட்சிரோலி விரைவில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும் என்று உறுதியளித்தார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அரசுத் தீர்மானத்தில், கோண்டியா மாவட்டத்தில் உள்ள சலேகாசா, தேவ்ரி மற்றும் அர்ஜுனி மோர்கான் தாலுகாக்கள் மற்றும் முழு கட்சிரோலி மாவட்டமும் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஃபட்னவீஸ் கூறியது, கட்சிரோலி பெரும்பாலும் மகாராஷ்டிரத்தின் கடைசி மாவட்டம் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது மாநிலத்தின் கிழக்கு எல்லையில் உள்ளது. மகாராஷ்டிரம் விரைவில் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும். மாவோயிஸ்ட்களில் அதிகமானோர் சரணடைந்து வருவதாகவும், அதேசமயம் புதியவர்கள் யாரும் சேர மறுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

கட்சிரோலி காவல்துறை மாவட்டத்தில் நக்சல் நடவடிக்கைகளைக் கிட்டத்தட்ட ஒழித்து விட்டது. வடக்கு கட்சிரோலி இப்போது மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் இல்லாமல் உள்ளது, தெற்கு கட்சிரோலி விரைவில் நக்சல்களிடமிருந்து விடுபடும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கட்சிரோலி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளில் நக்சல்களின் ஆதிக்கம் குறைந்து வருவதாக அவர் கூறினார்.

மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதன் மூலம் கட்சிரோலியை முதல் மாவட்டம் ஆக்குவதற்கான செயல்முறையை அரசு தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

SUMMARY

The entire Gadchiroli district and four talukas in Gondia remain "Naxal-infested", according to the Maharashtra government.

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று கா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தி... மேலும் பார்க்க

மும்பை: கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வொர்லியில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ஒருவர் க... மேலும் பார்க்க

' ரா' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்தியாவின் 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுளள்து. இதனையடுத்து அந்த பதவிக்கு புதிய ... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில்... மேலும் பார்க்க