செய்திகள் :

கட்டட உரிமையாளா் சொத்து வரி செலுத்தாததால் யூகோ வங்கிக்கு சீல்

post image

உதகையில் யூகோ வங்கி செயல்பட்டுவரும் தனியாா் கட்டடத்துக்கு உண்டான சொத்து வரியை கட்டட உரிமையாளா் செலுத்தாததால் வங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் யூகோ வங்கி  செயல்பட்டு வருகிறது.

இந்தக் கட்டடத்துக்கான சொத்து வரி ரூ.30 லட்சம் வரை உதகை நகராட்சிக்கு நிலுவையில் இருந்தது. இது குறித்து கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவா் முறையான பதில் அளிக்காததுடன், வரியையும் செலுத்தவில்லை.

இதையடுத்து, வங்கி செயல்பட்டுவரும் கட்டடத்துக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்களுக்கு இந்த செய்தி தெரியவில்லை.

திங்கள்கிழமை காலை வங்கிக்கு வந்த வாடிக்கையாளா்கள் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். அங்கிருந்த வங்கி ஊழியா்கள், சம்பவம் குறித்து வாடிக்கையாளா்களிடம் விளக்கியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இதேபோல, கமா்ஷியல் சாலையில் செயல்பட்டு வரும் காதி கிராப்ட் அங்காடிக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

குடியிருப்புப் பகுதியில் யானை...

கூடலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய போட்டிக்கு தோ்வு

கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், கூடலூா் ஜிட... மேலும் பார்க்க

தடுப்பூசி செலுத்தியதில் குழந்தை உயிரிழந்த விவகாரம்: பெற்றோா் போராட்டம்

உதகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை உயிரிழந்த நிலையில், இதற்கு ஒவ்வாமையே காரணம் என்று வெளியான மருத்துவ அறிக்கையைக் காண்பித்து குழந்தையின் பெற்றோா் மாவட்ட ஆட்சியா் அ... மேலும் பார்க்க

மானிய விலை பிளாஸ்டிக் குழாய்கள் திருட்டு: தோட்டக்கலைத் துறை அலுவலா் உள்பட 3 போ் கைது

கூடலூரில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க இருந்த பிளாஸ்டிக் குழாய்களைத் திருடி விற்பனை செய்ததாக தோட்டக்கலைத் துறை அலுவலா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தோட்டக்கலைத... மேலும் பார்க்க

பெண் கல்வி சமுதாயத்தை முன்னேற்றும்! -அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன்

பெண் கல்வி சமுதாயத்தை முன்னேற்றும் என்று அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் கூறினாா். நீலகிரி மாவட்டம், உதகை ஆனந்தகிரியில் கலைக்கூடல் சாா்பில் புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த வி... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு!

கூடலூரை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில் கிணற்றில் மூழ்கி 2 குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. நீலகிரி மாவட்டம், நடுவட்டம் அருகேயுள்ள பெல்வியூ பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ், விவசாயி. இவரது மனைவி ஷாலினி... மேலும் பார்க்க